Monday, 5 September 2011

இதைப் படிச்சீங்களா?

குரங்கு ஒன்றை நண்டு கவ்வியது. தேள் கொட்டியது. பேயும் பற்றியது. இவை போதாதென்று அந்தக் குரங்கு மதுவைக் குடித்து, இஞ்சியைக் கடித்து, காஞ்சொறியின் பொடியைத் தூவிக்கொண்டு கையில் எரியும் கொள்ளிக்கட்டையைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டது.

அந்நிலையில் அது செய்யும் கேட்டுக்கு அளவுண்டா?

அதுபோல் புல்லியர்களிடம் ஆட்சிப் பொறுப்பு சேர்ந்துவிட்டால் அவர்கள் செய்யும் கேட்டுக்கும் அளவில்லை என்பதுதான் அந்தப் பாட்டின் பொருளாகும்.

குரங்குமாய் நண்டுகட்டித் தேளும் கொட்டிக்
குடியாத மதுக்குடித்துப் பேயு மேறி
இரங்கவரும் காஞ்சொறியின் பொடியும் தூவி
இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுந்தாற் போலத்
தருங்கருணை இல்லாத புல்லர் வாழ்வில்
தண்டிகையின் மீதேறிச் சம்பத் தேறிக்
கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக்
காடேறி நாடேறித் திரிவார் கண்டீர்.

 

No comments:

Post a Comment